
டில்லி சிறப்பு பிரதிநிதி: முதல்வர் விஜய் யாரை நியமிப்பார்?
தமிழக முதல்வர் விஜய் இன்னும் சில தினங்களில் டில்லி செல்ல உள்ள நிலையில், தமிழக அரசின் ‘டில்லி சிறப்பு பிரதிநிதி’ பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற பின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை நேரில் சந்திக்கும் மரபின் அடிப்படையில் இந்த டில்லி பயணம் நடைபெறுகிறது என தெரிவிக்கப்படுகிறது. இந்த பதவி பல நேரங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த, தேர்தலில் தோற்றவர்கள் அல்லது போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வழங்கப்படும் நடைமுறை இருப்பதாகவும் கூறப்படுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் இந்த பதவியை மிக முக்கியமாக எடுத்துக் கொள்ளாத போதிலும், மாநில அரசின் கோப்புகள் மத்திய அமைச்சகங்களில் எந்த நிலையில் உள்ளன என்பதை கண்காணிப்பதற்கும், டில்லி–சென்னை தொடர்பு வலையத்தை பராமரிப்பதற்கும் இது முக்கியமான பதவி என குறிப்பிடப்படுகிறது.





























