ஈரான் தொடர்புடைய டிரோன் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல்களைத் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு பதற்றம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்கள் நடைபெறுவதால், மத்திய கிழக்கில் உள்ள தூதரகங்களில் இருந்து அதிகாரிகளை வெளியேற்ற அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் டிரோன் தாக்குதல்களுக்கு இலக்கானதாகவும், இதன் பின்னணியில் குவைத் தூதரகம் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லெபனானில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல்களில் 52 பேர் உயிரிழந்ததுடன், 154 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் தாக்குதல்களால் கத்தாரில் 16 பேர் காயமடைந்துள்ளனர். ஜோர்டான், பஹ்ரைன், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தூதரக அதிகாரிகள் ஈரானின் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.




