வளைகுடா வழியாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு, குறிப்பாக எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு, அமெரிக்க அரசு ஆபத்து காப்பீடும் கடற்படை பாதுகாப்பும் வழங்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேற்கு ஆசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளின் ஏற்றுமதி கப்பல்கள் செல்லும் முக்கிய கடல் பாதையாக குறிப்பிடப்படும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், சுமார் 700 எண்ணெய் கப்பல்கள் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஹார்முஸ் வழியாக எந்தக் கப்பலையும் அனுமதிக்க மாட்டோம் என்று முன்பே அறிவித்த ஈரான், இரண்டு கப்பல்களை தாக்கியதாகவும் செய்தி கூறுகிறது.
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட பதிவில், வளைகுடா வழியாகப் பயணிக்கும் அனைத்து கப்பல்களுக்கும்—குறிப்பாக எண்ணெய் கப்பல்களுக்கு—ஆபத்து காப்பீடு மற்றும் கடற்படை பாதுகாப்பு வழங்க அமெரிக்க மேம்பாட்டு நிதி கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களுக்கு அமெரிக்க படை பாதுகாப்பு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.




