புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில், அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம் (FCRA) தொடர்பான திருத்த மசோதா–2026 லோக்சபாவில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், வெளிநாட்டு நிதி பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, அது சரியான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவே இந்த திருத்தம் கொண்டு வரப்படுவதாக கூறினார்.

வெளிநாட்டு பங்களிப்பை பயன்படுத்தி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோர் மற்றும் அந்த நிதியை தனிப்பட்ட ஆதாயத்திற்காக திருப்பிச் செலுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவிவதால் இது ஆபத்தானது என அவர்கள் குற்றம்சாட்டினர்.

விவாதத்திற்குப் பிறகு, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை வழிநடத்திய கிருஷ்ணா பிரசாத் தென்னெட்டி குரல் ஓட்டெடுப்பு நடத்தினார். அதில் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.