மக்களின் ஆதரவை இழந்த திமுக, நடிகர் விஜயை முன்னிறுத்தி ஓட்டுகளைப் பிரிக்க முயற்சிக்கிறது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை குற்றம்சாட்டினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக பிரசாரம் நல்ல முறையில் தொடங்கியுள்ளதாகவும், பாஜக வேட்பாளர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். களத்தில் உற்சாகம் நிலவுவதாகவும் கூறினார்.
திமுக–காங்கிரஸ் கூட்டணியை அவர் கடுமையாக விமர்சித்து, மக்கள் அந்த கூட்டணியை தோற்கடிப்பார்கள் என்றார். தேஜ கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கும் என்றும், மாநில மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சியை வழங்குவோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், மக்கள் திமுகவை தோற்கடிக்க முடிவு செய்துவிட்டனர் என்பதை திமுக புரிந்து கொண்டதால், விஜயை முன்னிறுத்தி திமுக எதிர்ப்பு ஓட்டுகளையும் மக்களின் கோபத்தையும் பிரிக்க முயற்சிக்கிறது என்றார். மக்கள் புத்திசாலிகள்; தங்களுக்கு எது நல்லது என்பதை புரிந்து கொண்டு தேஜ கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்றும் பியூஷ் கோயல் கூறினார்.




