தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பருவகால சராசரியைத் தாண்டி மழைப்பொழிவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மாநிலத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கக் கடலிலிருந்து கடலோர கர்நாடகம் வரை, கடலோர ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா வழியாக வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தாக்கத்தால் தமிழகத்தின் சில பகுதிகளில் மழைச் செயல்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.





