மேற்காசியப் போர் பதற்றங்கள் நீடிக்கும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஓமன் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒரு சரக்கு கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது. சம்பவத்துக்குப் பிறகு கப்பலிலிருந்து அவசர உதவி கோரப்பட்டது.
ஓமன் கடற்படையின் உதவியுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தக் கப்பலில் மொத்தம் 28 மாலுமிகள் இருந்ததாகவும், அதில் 24 பேர் இந்தியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தீப்பிடித்த கப்பலிலிருந்து 21 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதே நேரத்தில், கண்காணிப்பில் இல்லாத மூன்று பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த தாக்குதலை யார், எங்கிருந்து நடத்தினர் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன் ஜூன் 8-ஆம் தேதி ஓமன் அருகே கச்சா எண்ணெய் ஏற்றி வந்த இந்திய கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி, அதில் இருந்த 24 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டனர்.





