இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடரில் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்திய ஆடவர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜூலை 14 முதல் ஜூலை 19 வரை ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

அணியின் துணை கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

விக்கெட் கீப்பர்களாக கேஎல் ராகுல், இஷான் கிஷன் தேர்வாகியுள்ளனர். பந்துவீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் ப்ரார் ஆகியோர் இடம் பெற்றுள்ள நிலையில், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.