மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கட்சியில் அதிருப்தியுடன் விலகுபவர்கள் பாஜவில் இணைந்தால் “மகிழ்ச்சி” என கூறி சவால் விடுத்தார்.

கோல்கட்டாவில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்ச்சியில் பேசிய அவர், தனக்கு “ஈகோ இல்லை” என்றும், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி பாஜவுக்கு எதிராக மற்ற கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நிகழ்ச்சியை தடுக்க “குண்டர்கள்” அனுப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கட்சியை விட்டு செல்லுபவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்றும், அவர்கள் இடங்களை நிரப்ப பலர் தயாராக உள்ளனர் என்றும் மம்தா தெரிவித்தார்.

டில்லியில் நேற்று நடந்த சம்பவங்களை குறிப்பிட்ட அவர், மாணவர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாக கூறினார். பிரதமர் வந்த வாகனம் வேறு பாதையில் சென்றதாக கேட்டதாகவும், தேவைப்பட்டால் போராட்டங்களில் தானும் பங்கேற்பேன் என்றும் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு எதிராக இண்டி கூட்டணியின் கீழ் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.