டில்லி போராட்டத்தின் போது நிலைமை சரியான முறையில் கையாளப்பட்டதாகவும், காலப்போக்கில் உண்மைகள் வெளிவரும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ஜெய்ப்பூரில் பேசிய அவர், போராட்டத்தில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாக குற்றம்சாட்டினார். இத்தகைய சக்திகள் இயக்கத்தை கைப்பற்ற முயன்று அங்கு குழப்பம் உருவாக்கியதை மக்கள் பின்னர் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

மேலும், ஜார்க்கண்ட், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நிகழ்வதை குறிப்பிட்டு, அது நாட்டிற்கு ஒரு சவாலாக இருப்பதாக கூறினார்.

உலகளாவிய பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும் இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகத் தொடர்வதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு வேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 2047க்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறி உலகளாவிய வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.