அரசியல் விவாதங்களில் தரம் தாழ்ந்த விமர்சனங்களும் இழிவுச்சொற்களும் வேண்டாம் என்று காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் கேட்டுக்கொண்டார்.

ஆகஸ்ட் 19ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு வர உள்ளதாக அவர் குறிப்பிட்டார். மாமல்லபுரத்தில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெரிய சுற்றுலா திட்டத்தை கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மூத்த அரசியல்வாதிகள் இத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்களை பேசுவது தவறு என அவர் கூறினார். மேலும், தி.மு.க. ஆட்சிக்கு வராமல் போனதற்கான காரணங்களை ஆராயாமல், த.வெ.க.வை “ஜோக்கர் கட்சி” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சிப்பதும் தவறு என சுட்டிக்காட்டினார்.

முன்னதாகவும் இழிவுச்சொற்கள் பயன்படுத்தப்பட்டதால் தி.மு.க. இக்கட்டான சூழ்நிலைக்கு சென்றதாக கூறிய அமைச்சர், அரசியல் விவாதங்களில் மரியாதையும் பொறுப்பும் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.