
சி.பி.எஸ்.இ. மறுமதிப்பீடு இணையதளத்தில் தொடர் சைபர் தாக்குதல்: டில்லி போலீசில் வழக்கு
பிளஸ் 2 விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீடு சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் தொடர்ச்சியான சைபர் தாக்குதல்கள் நடந்ததாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) டில்லி போலீசில் புகார் அளித்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை நாடு முழுவதும் 18.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியதாக சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் கணினித் திரை வழி மதிப்பீட்டு முறையில் திருத்தப்பட்டன. முடிவுகள் வெளியான பின்னர் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என மாணவர்கள் மற்றும் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து திருத்தப்பட்ட விடைத்தாள்களை இணையதளத்தில் பதிவேற்றி, மறுமதிப்பீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதில் சில பக்கங்கள் தெளிவாக இல்லை, சில பதில்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.


































