
ஆன்ஸ்கிரீன் விடைத்தாள் மதிப்பீட்டில் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டன: சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ நடத்தும் தேர்வுகளின் கணினி வழி விடைத்தாள் மதிப்பீட்டு முறை (ஆன்ஸ்கிரீன் மார்க்கிங்) தொடர்பாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, கண்டறியப்பட்ட குறைபாடுகள் சரிசெய்யப்பட்டுள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்பதை உறுதிசெய்ய கூடுதல் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது. வெளியிட்ட அறிக்கையில், இணையதளத்தில் கண்டறியப்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள் திருத்தப்பட்டதாக சிபிஎஸ்இ தெரிவித்தது. இனி எந்தவிதமான குறைபாடுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வு தொடர்கிறது என்றும் கூறப்பட்டது. பொதுவெளியில் சுட்டிக்காட்டப்படும் பாதுகாப்புச் சிக்கல்களை தாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், கடந்த சில நாட்களாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் ஐஐடிகளிலிருந்து சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அடங்கிய குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வாரியம் தெரிவித்தது.


































