
கூட்டணி அரசியலில் ‘எட்டப்பன்’ யார்? தி.மு.க.–காங்கிரஸ் மோதல் தீவிரம்
தமிழகத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் இடையிலான உறவில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஸ்டாலின் மீது கோபமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழக காங்கிரஸ் தரப்பினர் ஸ்டாலினை ‘எட்டப்பன்’ என மறைமுகமாக விமர்சிக்கத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல், தொகுதி மறுவரையறை விவகாரத்தின் பின்னணியிலும் தீவிரமடைந்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், வி.சி.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். இதுகுறித்து தி.மு.க. துணைப் பொதுச்செயலர் கனிமொழி, காவிரி விவகாரத்தை திசைதிருப்பி காங்கிரசை காப்பாற்றவே இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் த.வெ.க. அரசை பின்னால் இருந்து இயக்குவது யார், தேர்தலுக்குப் பின் முதுகில் குத்திவிட்டு ஓடியவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும் எனவும் கடுமையாக விமர்சித்தார்.


































