
அரசு பங்களாவை காலி செய்த பழனிசாமி; ராயப்பேட்டையில் அ.தி.மு.க. அலுவலகம் அருகே குடியேற்றம்
முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ‘செவ்வந்தி இல்லம்’ அரசு பங்களாவை காலி செய்து வெளியேறியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் வசித்து வந்த வீடு இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்றபோது அவருக்கு இந்த அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. 2016 தேர்தலுக்குப் பிறகும் அதே வீட்டிலேயே அவர் தங்கியிருந்தார்; 2017ல் முதல்வராக ஆன பின்னரும் அங்கேயே தொடர்ந்து வசித்தார். 2021 தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை இழந்தபோதும், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அவர் அந்த வீட்டிலேயே இருந்தார். ஆனால், சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்ததால், அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


































