
புதுச்சேரியில் 5 தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் நேருக்கு நேர் மோதல்
புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் திருபுவனை, மங்கலம், நெல்லித்தோப்பு, ராஜ்பவன், காலாப்பட்டு ஆகிய 5 தொகுதிகளில் திமுகவும் காங்கிரஸும் நேருக்கு நேர் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. இந்தத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்–பா.ஜ.–அ.தி.மு.க. அடங்கிய தே.ஜ. கூட்டணியும், காங்கிரஸ்–திமுக–கம்யூனிஸ்ட் கட்சிகள்–வி.சி.க. ஆகியவை உள்ள ‘இண்டி’ கூட்டணியும் களமிறங்கியுள்ளன. ‘இண்டி’ கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் வரை நீடித்து, 30 தொகுதிகளில் காங்கிரஸ் 16, திமுக 14 என அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டன. திமுக ஒதுக்கிய உழவர்கரை தொகுதியை வி.சி.க.க்கு வழங்கியதை திருமாவளவன் ஏற்க மறுத்து, ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார்.


































