
கோடை வெயில் தாக்கம்: நாட்டின் மின் தேவை 260.45 ஜிகா வாட் புதிய உச்சம்
நாடு முழுவதும் கோடை வெயில் கடுமையாக நீடிக்கும் நிலையில், மே 19 அன்று இந்தியாவின் மின் தேவை 260.45 ஜிகா வாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏசி, விசிறி, ஏர் கூலர் போன்ற சாதனங்களின் பயன்பாடு கணிசமாக உயர்ந்ததே இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் என அதிகாரிகள் கூறினர். இதற்கு முந்தைய நாள் மே 18 அன்று மின் நுகர்வு 257.37 ஜிகா வாட் என்ற சாதனையை எட்டியிருந்த நிலையில், அடுத்த நாளே அது முறியடிக்கப்பட்டது.


































