
தொகுதி பங்கீடு: தி.மு.க. குழுவை தவிர்த்து ஸ்டாலினுடன் நேரடி பேச்சை விரும்பும் திருமாவளவன்
சென்னையில் வெளியாகிய தகவலின்படி, தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் நேரடியாக பேச விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.) தலைவர் தொல். திருமாவளவன் விரும்புகிறார். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள வி.சி., கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.க. குழுவுடன் நடந்த முதற்கட்ட பேச்சில் குறைந்தது 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வி.சி. தரப்பு வலியுறுத்தியதாக தகவல். இதற்கு, கடந்த தேர்தலைப் போலவே ஆறு தொகுதிகளில் போட்டியிடலாம்; கூடுதலாக ஓரிரு தொகுதிகளை கட்சி தலைமையிடம் கேட்டு பெற்றுத் தர முயற்சிப்போம்; இரட்டை இலக்கத்தில் ஆசைப்பட வேண்டாம் என தி.மு.க. குழுவினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


































