
திமுக நலத்திட்டங்கள் தொடரும் என முதல்வரைச் சொல்ல வைத்ததே வெற்றி: உதயநிதி
சென்னை: திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என முதல்வரின் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்க்கட்சியாக தங்களின் வெற்றி என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், சட்டசபையில் இருந்தபோது பதிலளிக்காமல் வீட்டுக்குச் சென்று முதல்வர் அறிக்கை வெளியிட்டதாக குற்றம்சாட்டினார். தங்களுக்குக் கிடைத்த வாக்கு விழுக்காடு தங்களுக்கு தெரியும் என்றும், மக்கள் தீர்ப்பை மதித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம் என்றும் கூறினார். மேலும், பெரும்பான்மை இல்லாத நிலையிலும் பதவி ஆசையால் கவர்னர் மாளிகைக்கு தினமும் போகும் நிலை தங்களுக்கு இல்லை என தெரிவித்தார். திமுக மக்களால் நிராகரிக்கப்பட்டதாக கூறினாலும், திமுகக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் முதல்வர் பதவிக்கு வந்ததாகவும் அவர் வாதிட்டார்.


































