
வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்: ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றம்
ஐநாவில் தீர்மானம் வளைகுடா நாடுகள் மீது ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை கண்டித்து, அவற்றை உடனடியாக நிறுத்தக் கோரும் சிறப்பு தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ளது. இந்த நடவடிக்கை நியூயார்க் நகரிலுள்ள ஐநா தலைமையகத்தில் எடுக்கப்பட்டது. வளைகுடா நாடுகளில் தாக்குதல் தொடர்வதாக தகவல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி என்ற பெயரில், யுஏஇ, சவுதி அரேபியா, ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக செய்தி கூறுகிறது. துபாயில் வங்கிகள் மற்றும் பொருளாதார மண்டலங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. துபாயில் குடியிருப்பு கட்டடத்தில் டிரோன் தாக்குதல் அதிகாலை சுமார் 2.45 மணியளவில், துபாய் கிரீக் ஹார்பர் பகுதியில் உள்ள உயரமான குடியிருப்பு கட்டடத்தின் மீது டிரோன் தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், மக்கள் அவசரமாக வெளியேறினர். யாருக்கும் காயம் இல்லை; அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


































