
வேலைவாய்ப்பு காரணமாக முன்னாள் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆஸ்திரேலியாவுக்கு குடியேற்றம்
மெல்போர்ன்: நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆதெர்ன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு குடியேறியுள்ளார். தொழிலாளர் கட்சி சார்பில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக பதவி வகித்த அவர், வேலைவாய்ப்பு வாய்ப்புகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. தகவலின்படி, நியூசிலாந்தில் இருந்த தனது வீட்டை விற்று, அந்த தொகையை கொண்டு மெல்போர்னில் அதைவிட பெரிய வீட்டை வாங்கியுள்ளார். தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அங்கு குடியேறியுள்ளார். நியூசிலாந்து குடிமக்கள் வெளிநாடுகளுக்கு செல்லுவது புதிதல்ல என்றாலும், முன்னாள் பிரதமரும் நீண்ட காலம் எம்.பி.யாக இருந்தவரும் வேலைவாய்ப்பை முன்னிட்டு இடம்பெயர்வது கவனம் ஈர்த்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஜெசிந்தாவின் கணவருக்கு நியூசிலாந்தை விட சுமார் 50% அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் குறிப்பிடப்படுகிறது.


































