
15 வயதில் கைது; 36 வயதில் விடுதலை: கொல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவு
வயது உறுதிப்படுத்தலுக்குப் பின் நீதிமன்ற உத்தரவு மேற்கு வங்கத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறப்படும் வழக்கில் 2005ல் கைது செய்யப்பட்ட வங்கதேச நபர், சுமார் 21 ஆண்டுகளாக காவலில் இருந்த நிலையில், அவரை உடனடியாக விடுவிக்க கொல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுவனாக இருந்தபோது கைது கைது செய்யப்பட்ட போது அவருக்கு 15 வயது என்றும், அப்போது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி அவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். ‘ஆசிபிக்கேஷன்’ பரிசோதனை அறிக்கை விசாரணையின் போது வயதை நிர்ணயிக்க ‘ஆசிபிக்கேஷன்’ பரிசோதனை நடத்த மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அறிக்கையில், கைது நேரத்தில் வயது 15 என்றும், தற்போது 36 என்றும் உறுதியாகியுள்ளது.


































