
டெண்டர், சேலஞ்ச், பிராக்சி ஓட்டு: 3 முக்கிய ஓட்டு முறைகள் விளக்கம்
முதன்முறையாக ஓட்டுச்சாவடிக்குச் செல்லும் இளம் வாக்காளர்களுக்கு, எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட்டாலும் தகுதியான வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் போகாத வகையில் தேர்தல் ஆணையம் சில சிறப்பு ஏற்பாடுகளை வைத்துள்ளது. பொதுவாக வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மூலம் வாக்களிக்கிறார்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு முறையையும் பயன்படுத்துவர். இதைத் தவிர, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும் மூன்று முக்கிய முறைகள்—டெண்டர் ஓட்டு, சேலஞ்ச் ஓட்டு, பிராக்சி ஓட்டு—உள்ளன. டெண்டர் ஓட்டு: ஓட்டுச்சாவடியில் உங்கள் பெயரில் ஏற்கனவே யாரோ வாக்களித்ததாக தெரிய வந்தால் பதற்றப்பட வேண்டாம். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அடையாளச் சான்றுகளை காட்டி உறுதிப்படுத்தினால், அவர் வாக்குச் சீட்டு (பேலட் பேப்பர்) வழங்கி வாக்களிக்க அனுமதிப்பார். இது EVM-ல் பதிவாகாது; முடிவு மிக நெருக்கமாக இருக்கும் சூழலில் மட்டுமே எண்ணிக்கையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.


































