
கட்சி நிர்வாகிகளுக்கு சொகுசு கார் பரிசு: தி.மு.க. எம்.எல்.ஏ மீது புகார்
திருச்சி: மண்ணச்சநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ கதிரவன், கட்சி நிர்வாகிகளுக்கு சொகுசு கார்கள் பரிசளித்த விவகாரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளார்; இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2021 சட்டசபை தேர்தலில் தனது வெற்றிக்காக உழைத்ததாக கூறப்படும் மண்ணச்சநல்லூர் தொகுதி தி.மு.க ஒன்றிய செயலர்கள் ஐந்து பேர் மற்றும் பேரூராட்சி செயலர்கள் இரண்டு பேருக்கு தலா சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான கார்கள் வழங்கப்பட்டதாகவும், அந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இந்த பரிசுகள் வழங்கப்பட்டதால் இது தேர்தல் விதிமுறை மீறலாகும் எனக் கூறி, திருச்சி கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சரவணனிடம் அ.தி.மு.க திருச்சி வடக்கு மாவட்ட ஐ.டி. விங் செயலர் நாகராஜன் புகார் அளித்துள்ளார்.


































