
ஆன்லைன் டிக்கெட்டுக்கு மட்டும் காப்பீடா? ரயில்வேயிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி
ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் குறைந்த கட்டணத்தில் விபத்து காப்பீடு வழங்குவது பாகுபாடு என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நிலைய கவுன்ட்டர்களில் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கும் இதே காப்பீடு வசதி கிடைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. ராதா யாதவ் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், ஆன்லைன் டிக்கெட் பயணிகளுக்கு மட்டும் காப்பீடு வழங்கப்படுவதால், கவுன்ட்டரில் டிக்கெட் வாங்கும் லட்சக்கணக்கான பயணிகள் அந்த வாய்ப்பை இழக்கிறார்கள் எனக் கூறி, இதை சரிசெய்ய உத்தரவு கோரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் அசானுதின் அமானுல்லா, மகாதேவன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் ரயில்வே துறை எந்த சாதகமான முடிவையும் தெரிவிக்கவில்லை என அமர்வுக்கு தெரிவித்தார்.


































