
வேலுமணிக்கு எதிராக செந்தில் பாலாஜியை இழுக்க EPS முயற்சி என தகவல்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS), முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக கட்சிக்குள் ஒரு வலுவான மாற்றுச் சக்தியை உருவாக்கும் நோக்கில், முன்னாள் தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியை அ.தி.மு.க.வில் இணைக்க முயல்கிறார் என்ற தகவல் அக்கட்சியின் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அந்த வட்டாரங்கள் கூறுவதன்படி, த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த பின்னர் மீண்டும் EPS அணியில் வேலுமணி இணைந்தாலும், டில்லி தொடர்புகள் மற்றும் கவுண்டர் சமுதாயத்தில் உள்ள செல்வாக்கு காரணமாக அவர் தன்னை அரசியல் ரீதியாக வீழ்த்தக்கூடும் என்ற அச்சம் EPS-க்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வேலுமணியை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய ஒருவரை கட்சிக்குள் உருவாக்க முயன்ற EPS-க்கு சரியான முகம் கிடைக்கவில்லை என்றும், EPS-க்கு நெருக்கமான சிலர் “செந்தில் பாலாஜி பொருத்தமானவர்” என பரிந்துரைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


































