
இன்றைய முக்கிய நிகழ்வுகள்: சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜர், திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை
மார்ச் 15 அன்று தமிழகத்தில் அரசியல், பொதுநிகழ்வுகள், கல்வி, வானிலை மற்றும் விளையாட்டு தொடர்பான முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. எல்பிஜி சிலிண்டர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. பல மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்களில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இன்று தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, குளறுபடிகளால் பிப்ரவரி 8 அன்று ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று நடைபெற்றது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று மூன்றாவது முறையாக விசாரணை நடத்துகின்றனர். டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் ஆஜரானார்.

































