
தேர்தல் நிதியின் பாதி ‘லபக்’ என காங். நிர்வாகிகள் புகார்
தமிழகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சி நியமித்த உண்மை கண்டறியும் குழுவிடம், தேர்தல் பணிக்காக வழங்கப்பட்ட நிதியின் குறிப்பிடத்தக்க பகுதி செலவிடப்படாமல் பதுக்கப்பட்டதாகவும், அதனால் பிரச்சாரம் பாதிக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த பின்னடைவை ஆய்வு செய்ய டெல்லி மேலிடம் சார்பில் ஐவர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் முன்னாள் எம்.பி. ஜெயகுமார், மாநில நிர்வாகிகள் சொர்ணா சேதுராமன், எஸ்.எம். இதயதுல்லா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். முதலில் 234 தொகுதிகளிலும் கருத்து கேட்க திட்டமிட்டாலும், நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் தோல்வியடைந்த 23 தொகுதிகளில் விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


































