
இந்தியா–நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: வர்த்தகம், முதலீடு உயர்வு
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகத்தையும் முதலீட்டையும் அதிகரிக்கும் நோக்கில், இரு நாடுகளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்.டி.ஏ.) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன என்று புதுடில்லியில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் சரக்கு வர்த்தகம், சேவைகள், சுங்க நடைமுறைகள், வர்த்தக எளிதாக்கம், சுகாதார மற்றும் தர நெறிமுறைகள், தகராறு தீர்வு உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய 20 அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவுக்கு கிடைக்கும் முக்கிய பலன்களில், ஜவுளி, பிளாஸ்டிக், தோல், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான இந்தியப் பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தையில் 0% சுங்கவரி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் 15 ஆண்டுகளில் சுமார் ரூ.1.88 லட்சம் கோடி அளவிலான அன்னிய முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தகவல் தொழில்நுட்பம், நிதி சேவைகள், கல்வி, சுற்றுலா போன்ற துறைகளில் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

































