
அழுத்தத்திற்கு அஞ்சிப் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்: ஈரான் அதிபர்
அழுத்தத்திற்கு அஞ்சிப் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பை பேணுவதில் ஈரான் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் ஹார்மூஸ் ஜலசந்தி தொடர்பான நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச அளவில் எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டதாக செய்தி தெரிவிக்கிறது. பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் வகையில் மே 1 வரை போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால் முதல்கட்ட பேச்சு வெற்றியடையாத நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுக்காக பாகிஸ்தானில் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.


































