
செந்தில் பாலாஜி கைது: உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை; நிபந்தனையுடன் முன்ஜாமின்
டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு தொடர்பான வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கி, தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை (DVAC) பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் கொள்முதல் மற்றும் டெண்டர் நடைமுறைகளில் முறைகேடுகள், சட்டவிரோதமாக ‘பார்’கள் ஒதுக்கீடு உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடந்ததாகக் கூறி, லஞ்ச ஒழிப்பு துறை ஜூலை 28-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்ட ஏழு பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.


































