
சீனா தொடங்கிய உலகளாவிய ஏ.ஐ. நிர்வாக அமைப்பில் இந்தியா இணையவில்லை
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிர்வாகத்தை மையமாகக் கொண்டு சீனா புதிய சர்வதேச அமைப்பை தொடங்கியுள்ளது. இதில் 29 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்தியா இந்த முயற்சியில் இணையாமல் விலகி நின்றுள்ளது. ‘டபிள்யூ.ஏ.ஐ.சி.ஓ.’ (World AI Cooperation Organization) என பெயரிடப்பட்ட இந்த அமைப்பை சீன அதிபர் ஷீ ஜின்பிங் தொடங்கி வைத்தார். நிகழ்வில் ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ குட்டரெஸ் கலந்து கொண்டார். இந்த அமைப்பு ஷாங்காயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ளது. உலகளாவிய ஏ.ஐ. நிர்வாகத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு சீனா விடுக்கும் நேரடி சவாலாக இந்த கட்டமைப்பு பார்க்கப்படுகிறது. ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளதுடன், 10 ஆப்ரிக்க நாடுகள் மற்றும் 12 ஆசிய நாடுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.


































