
ஜோதிராவ் புலே 200வது பிறந்த நாள்: இன்று தொடங்கும் கொண்டாட்டங்கள்
ஏப்.11 இன்று, இந்தியாவின் தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவரான மகாத்மா ஜோதிராவ் புலேவின் பிறந்த நாள் நினைவாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அவரது 200வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடங்கவிருப்பதால், நாளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. 1827ல் மகாராஷ்டிராவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த புலே, ஆரம்பத்தில் சந்தித்த சிரமங்களையும் மீறி கற்றலிலும் சமூக மாற்றத்திற்கான அர்ப்பணிப்பிலும் உறுதியாக இருந்தார். துணிவு, இடைவிடாத தேடல், பொதுநல நோக்கம் ஆகியவை அவரது வாழ்க்கையின் அடையாளங்களாகக் கூறப்படுகிறது. அவரது இலக்கின் மையமாக கல்வி இருந்தது. பலருக்கு கற்றல் மறுக்கப்பட்ட காலத்தில், பெண்களுக்கும் முறையான கல்வி வாய்ப்பு இல்லாதவர்களுக்கும் முன்மாதிரி பள்ளிகளைத் திறந்து, அறிவு என்பது சிலருக்கான சிறப்புரிமை அல்ல; பகிரப்பட வேண்டிய சக்தி என்ற கருத்தை வலியுறுத்தினார்.


































