
வளர்ந்த இந்தியா பயணத்தில் உலகமே இணைக்க விரும்புகிறது: மோடி
வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் உலகமே பங்கேற்க விரும்புகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து உலக நாடுகளில் அதிக உற்சாகம் காணப்படுவதாகவும் அவர் கூறினார். புதுடில்லியில் நடைபெற்ற 19வது ரோஜ்கார் மேளாவில், பல்வேறு அரசுத் துறைகளில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 51,000 பேருக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் நியமனக் கடிதங்களை வழங்கினார். இது நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு முக்கியமான நாள் என அவர் குறிப்பிட்டார். வளர்ச்சிப் பயணத்தை வேகப்படுத்துவதில் இந்திய இளைஞர்கள் முக்கியப் பங்காற்றி வருவதாகவும், வரும் ஆண்டுகளில் “வளர்ந்த இந்தியா” என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதில் புதிய நியமனர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்றும் மோடி தெரிவித்தார். நியமனம் பெற்றவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

































