
த.வெ.க.வில் அமைப்பு தடுமாற்றம்; வேட்பாளர் தேர்வில் அதிருப்தி
த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு வரும்போது கூட்டம் அலைமோதுவதாகவும், அதை கட்டுப்படுத்த கட்சி நிர்வாகிகளும் போலீசாரும் சிரமப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் திருத்தணி உள்ளிட்ட பல தொகுதிகளில் வேட்பாளர்கள் கட்சி நிர்வாக ஆதரவு குறைவாக, பெரும்பாலும் தனியாகவே பிரச்சாரம் செய்யும் நிலை இருப்பதாக கட்சிக்குள் பேசப்படுகிறது. 2024ல் கட்சி தொடங்கியதிலிருந்தே பல கட்டங்களில் குழப்பம் தொடர்ந்ததாக நிர்வாகிகள் கூறுகின்றனர். கொள்கை நிலைப்பாடு குறித்து தெளிவு இல்லாத நிலையில், சில தலைவர்களை ‘கொள்கை முன்னோடிகள்’ என அறிவித்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2024 அக்டோபரில் விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டில் பெரும் கூட்டம் திரண்டதால் கட்சி சரியான பாதையில் செல்கிறது என்ற தோற்றம் உருவானது.


































