
காங்கிரஸ் நிர்வாகியை வேட்பாளராக அறிவித்த திருமாவளவன்; விசிகவில் அதிருப்தி
கடலூர்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், காட்டுமன்னார் கோவில் சட்டசபைத் தொகுதியில் தன் பதிலாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்ததால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மாநில அரசியலில் கவனம் செலுத்தும் நோக்கில், சட்டசபைத் தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக திருமாவளவன் முன்பு அறிவித்திருந்தார். ஆனால் பின்னர் திடீரென முடிவை மாற்றி, மறைந்த தலைவர் இளையபெருமாள் மகன் ஜோதிமணியை வேட்பாளராக அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஜோதிமணி தற்போது காங்கிரஸிலேயே இருப்பது தெரிய வந்தது. மேலும், அந்தத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து தன்னிடம் யாரும் நேரில் கேட்கவில்லை; திடீரென தகவல் வந்ததாகவும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.


































