
உலகளாவிய தட்டுப்பாடு: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தினசரி மாற்றம்
நாடு முழுதும் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 82 காசும், டீசல் லிட்டருக்கு 86 காசும் உயர்த்தப்பட்டதாக செய்தி தெரிவிக்கிறது. இதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே இரு எரிபொருள்களும் லிட்டருக்கு ரூ.3-ஐ தாண்டும் அளவில் உயர்ந்திருந்த நிலையில், மீண்டும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் டீலர்கள் வழியாக பெட்ரோல், டீசலை விற்பனை செய்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டு விலையை தினசரி நிர்ணயித்து, அடுத்த நாள் விலையை நள்ளிரவு 12 மணிக்கு அறிவிக்கும் நடைமுறை 2017 ஜூனில் அமலுக்கு வந்தது.


































