
கட்டாய மதமாற்ற புகார்: நாசிக் நீதிமன்றம் ஐ.டி. நிறுவன பெண் ஊழியருக்கு ஜாமின்
மஹாராஷ்டிரா நாசிக் மாவட்டத்தில், தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களை கட்டாயமாக மதமாற்றம் செய்ததாக கூறப்படும் புகாரில் கைது செய்யப்பட்ட பெண் ஊழியருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. நாசிக்கில் செயல்படும் பிரபல தனியார் ஐ.டி. நிறுவன கிளையில் பணியாற்றிய சில ஊழியர்கள், தங்களை முஸ்லிம் மதத்துக்கு கட்டாயமாக மாற்ற முயற்சி செய்யப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை நடந்ததாகவும் சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் நாசிக் போலீசார் வழக்கு பதிவு செய்து, நிறுவனத்துடன் தொடர்புடைய எட்டுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் நிறுவன மனிதவளத் துறை மேலாளர் நிடா கான் என்பவரை, இரு மாதங்களுக்கு பின் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

































