
தவெக எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பு தடை: ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
தமிழ்நாடு சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி பங்கேற்பதைத் தடை செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால தடை விதித்தது. சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த தேர்தலில், முன்னாள் திமுக அமைச்சர் பெரியகருப்பனை சீனிவாச சேதுபதி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்த முடிவை எதிர்த்து பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, தொகுதிக்குரிய தபால் வாக்குகள் தவறுதலாக திருப்பத்தூர் மாவட்டத் தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டதுடன், நம்பிக்கை வாக்கெடுப்பில் சீனிவாச சேதுபதி பங்கேற்கத் தடை விதித்தது. இதை எதிர்த்து சீனிவாச சேதுபதி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


































