
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி: இதுவரை 6 பேர் கைது
சென்னையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசை நிலைகுலையச் செய்ய சதி செய்ததாக கூறப்படும் வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவை கட்சி மாறச் செய்ய சில மர்ம நபர்கள் பேரம் பேசியதாக அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பேரம் பேசியதாக கூறப்படும் சென்னையை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். இவர், ‘லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்’ என்ற பெயரில் தேர்தலுக்கு தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடுபவர் என கூறப்படுகிறது.


































