
கத்தாரை மீண்டும் தாக்கினால் ஈரானின் எரிவாயு தளங்கள் அழிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: கத்தாரை மீண்டும் ஈரான் தாக்கினால், ஈரானின் ஒட்டுமொத்த எரிவாயு தளங்களையும் அமெரிக்கா அழிக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். இனி இஸ்ரேல் ஈரானை தாக்காது என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளும் மோதல் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் முக்கிய இயற்கை எரிவாயு தளமான ‘சவுத் பார்ஸ்’ மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்குப் பதிலடியாக, அண்டை நாடான கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஆலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் கத்தார் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், தாக்குதலுக்குப் பிறகு ஈரானிய தூதரக அதிகாரிகள் 24 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என கத்தார் உத்தரவிட்டுள்ளது.


































