
நிலநடுக்கம் பாதித்த வெனிசுலாவுக்கு இந்தியாவின் ‘ஆப்பரேஷன் அமிஸ்தாத்’ உதவி
இரட்டை நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு உதவ ‘ஆப்பரேஷன் அமிஸ்தாத்’ திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. மத்திய அரசு அறிவிப்பின்படி, இந்திய விமானப் படையின் இரண்டு ‘சி-17’ விமானங்கள் மூலம் 35 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மேலும் 41 பேர் கொண்ட மருத்துவக் குழு அனுப்பப்பட்டுள்ளது. வெனிசுலாவில் ஜூன் 24 அன்று தலைநகர் கராகசுக்கு மேற்கே மொரோன் கடற்கரைப் பகுதி அருகே 39 வினாடிகள் இடைவெளியில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவிலும், இரண்டாவது 7.5 ரிக்டர் அளவிலும் பதிவாகி, கராகஸ் மற்றும் லா குவைரா பகுதிகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.


































