
மகளிர் 33% இடஒதுக்கீட்டை இனி தாமதிக்கக் கூடாது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
சென்னை: பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தாமல் மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்தினார். வரும் லோக்சபா தேர்தலிலும், அதன் பின்னர் நடைபெறும் சட்டசபை தேர்தல்களிலும் பெண்கள் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டின் பலனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான விவகாரத்தில் முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை முன்வைத்து பேசினார். குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கை உள்ளிட்ட பெண்களை நினைத்து “இதயத்தில் இருந்து” பேசுவதாகவும், தன் வாழ்க்கைப் பயணத்தில் அவர்களின் பங்கு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.


































