
பயணியர் எண்ணிக்கையில் சென்னை விமான நிலையம் முதலிடம்; கோவை இரண்டாம் இடம்
கடந்த நிதியாண்டுக்கான பயணியர் போக்குவரத்து, சரக்கு கையாளுதல் மற்றும் விமான இயக்கங்கள் தொடர்பான விவரங்களை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் அதிக பயணியர் பயன்படுத்திய ‘டாப்-6’ விமான நிலையங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த பட்டியலில் சென்னை விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 2,30,17,324 பயணியர் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தியதாகவும், இது முந்தைய ஆண்டை விட 2.7% அதிகம் எனவும் AAI தெரிவித்துள்ளது. கோவை விமான நிலையம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 32,20,745 பயணியர் பயன்படுத்தியதாகவும், இது முந்தைய நிதியாண்டை விட 5.2% உயர்வு எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த நிதியாண்டில் 22,462 முறை விமானங்கள் வந்து சென்றதாகவும் AAI தரவு தெரிவிக்கிறது.


































