
உலக வளர்ச்சிக்கு இந்திய இளைஞர்கள் தலைமை வகிப்பர்: பிரதமர் மோடி
புதுடில்லி: வரும் ஆண்டுகளில் உலகளாவிய வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரில் இந்திய இளைஞர்கள் தலைமை தாங்குவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார். டில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேலைவாய்ப்பை உயர்த்த கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘பிரதம மந்திரி விக்சித் பாரத் வேலைவாய்ப்பு திட்டம்’ கீழ் 15 லட்சம் ஊழியர்களுக்கான முதல் தவணையாக ₹2,400 கோடி ஊக்கத்தொகையை பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக அவர் விடுவித்தார். பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா பயணத்தை முடித்து சில மணி நேரங்களுக்கு முன்பே திரும்பியதாக கூறிய மோடி, ஜி7 மாநாட்டில் வளர்ந்த நாடுகளின் தலைவர்களை சந்தித்ததாகவும் தெரிவித்தார். இந்திய இளைஞர்களின் திறன் குறித்து உலக நாடுகள் பேசத் தொடங்கியுள்ளன; அவர்களின் ஆற்றலை அங்கீகரிக்கவும் ஆரம்பித்துள்ளன என்றார்.


































