
குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது; கைரேகை தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த அமித்ஷா வலியுறுத்தல்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குற்றவாளிகள் தப்பிக்க விடக்கூடாது என்றும், குற்றத்தைக் கட்டுப்படுத்த நவீன கருவிகளை காவல் துறை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். டில்லியில் நடைபெற்ற அனைத்திந்திய கைரேகை மாநாட்டில் அவர் இதை தெரிவித்தார். குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதற்கு கைரேகைப் பதிவுகள் மிகச் சிறந்த கருவி என அமித்ஷா கூறினார். விசாரணைகளில் அறிவியல் ஆதாரங்களைச் சேகரிப்பதிலும், குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி செய்வதிலும் கைரேகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார். தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு (NAFIS) தற்போது அதன் திறனில் சுமார் 10% மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். சந்தேகநபர்களை அடையாளம் காண்பதைத் தாண்டி, ஒவ்வொரு குற்றச் சம்பவ இடத்திலிருந்தும் சேகரிக்கப்படும் கைரேகைகளை முறையாக பதிவேற்றி, தரவுத்தளத்தை பெருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.


































