
திருப்பரங்குன்றம் தீபம்: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் – ராம ரவிக்குமார்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் வலியுறுத்தினார். இதனை வலியுறுத்தும் வகையில், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூன்று அடி பித்தளை “வேல்” ஒன்றை காணிக்கையாக செலுத்தினார். இது நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற பிரார்த்தனையாகவும், பொதுமக்கள் முன் வலியுறுத்தலாகவும் அவர் தெரிவித்தார். முந்தைய ஆட்சி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ததாகவும், நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார். இருப்பினும் தீபம் ஏற்றப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.


































