
கோவையில் நாயுடு: ‘தி.மு.க. தோற்கணும்; தமிழகம் ஜெயிக்கணும்’
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தே.ஜ. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தமிழகம் வந்தார். கோவையில் தனியார் ஹோட்டலில் கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் தலைவர்களை அவர் சந்தித்தார். இந்த சந்திப்பில் பா.ஜ., அ.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் கோவையைச் சேர்ந்த முக்கிய தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அங்கு நாயுடு, “தி.மு.க. தோற்க வேண்டும்; தமிழகம் ஜெயிக்க வேண்டும்” என்ற கோஷத்தை முன்வைத்தார். ஆந்திராவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் டேட்டா சென்டர், குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட முயற்சிகளுக்காக முதலீடுகள் வந்துள்ளதாகவும், அமராவதியில் 2,500 ஏக்கரில் விமான நிலையம் அமைக்க திட்டமுள்ளதாகவும் அவர் கூறினார்.


































