
காலை ஏவுகணை தாக்குதல்; மாலையில் மீண்டும் போர் நிறுத்த அறிவிப்பு
டெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் நேற்று பரஸ்பரம் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மேற்காசியாவில் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் உருவான நிலையில், மாலையில் இரு தரப்பும் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் போர் 100 நாட்களை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் பல நாடுகளில் பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப். 8-ம் தேதி ஈரான் மற்றும் அமெரிக்கா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தாலும், நிரந்தர முடிவுக்கான முயற்சிகளுக்கிடையே இடையிடையே தாக்குதல்கள் தொடர்ந்தன. லெபனானில் செயல்படும் ஹெஸ்பொல்லா நிலைகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் குறிவைப்பதும் நடந்ததாக கூறப்படுகிறது.


































